பாத்துப் பாத்துப் வெட்டி வெச்சு
பதனமா வளர்த்ததால
பச்சைப் பசேலுன்னு நின்ன வீட்டுச் செடி,
தான் அழகுல மெய்மறந்து பார்க்க
களை அவனைப் பாத்து கலையாச் சிரிச்சுது.
வாழும் வரை வாழ்ந்து விட்டு போவோம் நாங்க.
நீ எப்படி வாழுவ, உன் கையில என்ன
நெனச்ச இடத்தில் நெனச்ச படி வளருவோம் நாங்க
வளர வளர தெனம் தெனம் வெட்டுவாங்க உன்ன,
பாத்துப் பாத்து வளர்ந்தாலும் உரம் உரமாத் தின்னாலும்
பருவக் காத்து வீசரப்ப உரிமை சொல்ல முடியுமா !
No comments:
Post a Comment